லக்னோ: அமேதி தொகுதியை பயங்கரவாதப் பகுதியாக மாற்ற முயற்சி நடப்பதாக ஸ்மிருதி இரானி தெரிவித்துள்ளார்.
அமேதியில் ராகுல் காந்தியை வீழ்த்தியுள்ளார் ஸ்மிருதி இரானி. இந்த வெற்றி நாடு முழுவதும் உள்ள பாஜகவினரை உற்சாகப் படுத்தி உள்ளது.
ஆனால் இந்த மகிழ்ச்சி தொடர்ந்து நீடிக்காத வகையில், ஸ்மிருதி இரானியின் வெற்றிக்குப் பாடுபட்ட பிரசாரக் குழு உதவி யாளரும் முன்னாள் கிராமத் தலைவருமான சுரேந்திர சிங் என்பவர் மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
இதனால் பாஜகவினர் கொதிப் பில் உள்ளனர். சுரேந்தர் சிங்கின் இறுதி ஊர்வலத்தில் பங்கேற்ற ஸ்மிருதி இரானி சிறிது தூரம் அவரது உடலை சுமந்து சென்றார்.
இதையடுத்து செய்தியாளர் களிடம் பேசிய அவர், சுரேந்திரசிங் கொலையின் மூலம் அமேதியை பயங்கரவாதப் பகுதியாக மாற்ற முயற்சி நடப்பதாகச் சாடினார்.
“அதற்கு இடம் கொடுத்து விடாமல் பாஜகவினர் அமைதி காக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
“அமேதியை அன்பாகப் பார்த்துக்கொள்ள வேண்டும் என்று ராகுல் கூறி இருந்தார். அந்தக் கருத்திற்கான பொருள் எனக்கு இப்போதுதான் விளங்கு கிறது,” என்று ஸ்மிருதி இரானி மேலும் தெரிவித்துள்ளார்.
நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் உத்தரப்பிரதேச மாநி லத்தில் உள்ள அமேதி தொகுதி யில் களமிறங்கினார் ஸ்மிருதி. இது காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி எம்பியாக இருந்த தொகுதி. இருவருக்கும் இடையே கடும் போட்டி நிலவியது. இரு தரப்பினரும் தீவிர பிரசாரம் மேற் கொண்டனர். இந்நிலையில் கணி சமான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார் ஸ்மிருதி.