சென்னை: குண்டர்களைப்போல் செயல்பட்டு பர்மா பஜார் வியாபாரிகளை மிரட்டிப் பணம் பறித்ததாக திருவல்லிக்கேணி காவல்நிலையத்தின் ஆய்வாளர் உள்ளிட்ட காவல் துறையினரை இடைநீக்கம் செய்து காவல்துறை ஆணையாளர் உத்தரவிட்டுள்ளார்.
அனைத்து விவகாரங்களிலும் தலைமைக் காவலர் சன்னி லாயிட் இருந்ததாகவும், அவர் இதற்காகவே மீண்டும் திருவல்லிக்கேணிக்கு மாற்றல் கேட்டு வந்ததாகவும் வியாபாரிகள் தரப்பில் கூறப்படுகிறது. இதனிடையே வியாபாரிகள் தரப்புப் புகார் காவல்துறை ஆணையாளர் கவனத்துக்குச் சென்றதை அடுத்து அனைவரும் கூண்டோடு மாற்றப்பட்டனர்.