தமிழ் மொழியில் உள்ள 247 எழுத்துகளையும் அந்த எழுத்துகள் இடம்பெற்ற சொற்களையும் எழுதி திருமதி ரம்யா சுரேஷ், திருமதி காயத்ரி பிரகாஷ் ஆகியோர் சிங்கப்பூர் சாதனைப் புத்தகத்தில் இடம்பிடித்துள்ளனர்.
பங்கேற்பாளர்கள், அந்த எழுத்து களைச் சுற்றிக் கோலத்தையும் வரைந்திருந்தனர். ஓர் எழுத்துக்கு ஒருவர் என்ற வீதத்தில் 247 பேரும், கோலமிட்ட 40 பேரும் என ஐந்து முதல் 68 வயது வரையிலான சுமார் 290 பேர் பங்கு கொண்டனர். நிகழ்ச்சியில் பங்கேற்ற திரு ஜோதி மாணிக்கவாசகம் ஞ, ங வரிசையிலான எழுத்துகளைப் பயன்படுத்தும் சொற்கள் ஏன் புழக்கதில் இல்லை என்பதை விளக்கிக் கூறினார். அச்சொற்களுக்கு ஈடான எளிய சொற்கள் பயன்பாட்டில் வந்துவிட்டதால் அச்சொற்கள் தேவையற்றவையாகி விட்டன என்றார் அவர்.
உட்லண்டஸ் வட்டாரத்தில் இருக்கும் ஃபூசுவான் உயர்நிலைப்பள்ளி யில் மே 25ஆம் தேதி நடந்த இந்த நிகழ்ச்சியில் பரதநாட்டியம், கரகாட்டம் என இந்திய பாரம்பரிய நடனங்களும் தொடக்கத்தில் இடம்பெற்றன. படம்: ரம்யா
247 தமிழ் எழுத்துகளுடன் சிங்கப்பூர் சாதனை
3 Jun 2019 06:10 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 3 Jun 2019 08:55
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
மூத்த ஊடகவியலாளர் செ.ப.பன்னீர்செல்வத்திற்கு ‘கணையாழி’ விருது
மே 3, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்
கீழடி அகழ்வாய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணாவுடன் ஒரு கலந்துரையாடல்
சப்தஸ்வரம் காணொளித் தொடர் (ஐந்தாம் பாகம்): இசைக்கருவிகளைப் பழுதுபார்க்கும் திரு ஜோதிபிரகாஷ்
மலேசியாவில் $3 பில்லியன் முதலீடு செய்யும் மைக்ரோசாஃப்ட்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!