நியூசிலாந்தின் கிறைஸ்ட்சர்ச் கொலை தாக்குதல் தொடர்பாக தன் மீதான 92 குற்றச்சாட்டு களுக்கும் தனக்கும் எந்தவித தொடர்பும் இல்லை என்று கைது செய்யப்பட்ட பிரெண்டன் டாரண்ட் நீதிமன்றத்தில் மறுத் திருக்கிறார்.
நியூசிலாந்தில் கிறைஸ்ட் சர்ச் நகரில் உள்ள அல்நூர் மசூதி, லின்வுடன் பகுதியில் உள்ள மசூதிக்குள் நுழைந்த மர்ம நபர்கள் தாங்கள் வைத் திருந்த துப்பாக்கியால் கண் மூடித்தனமாக சுட்டுக் கொன் றனர். இதில் 51 பேர் பலியாகி னர். பலர் பலத்த காயமடைந் தனர்.
உலகையே அதிர வைத்த இந்தச் சம்பவத்தில், ஆஸ்தி ரேலியாவைச் சேர்ந்த பிரெண்டன் டாரண்ட் என்பவர் தீவிரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.
இவர் மீது 92 குற்றச் சாட்டுகள் பதிவு செய்யப்பட் டன. இது தொடர்பான விசா ரணை நடந்து வருகிறது. இந்த நிலையில் நேற்று நீதிமன்றத்தில் பிரெண்டன் டாரண்ட் முன்னிலைப்படுத்தப் பட்டார்.
அப்போது தன் மீது சுமத்தப் பட்ட 51 கொலைக் குற்றத்தையும் கொலை முயற்சி குற்றத்தையும் பிரெண்டன் டாரண்ட் மறுத்திருக் கிறார். மேலும் அவர் நீதிமன்றத்தில் சிரித்ததாகவும் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
பிரெண்டனுக்கு மனநலத்தில் எந்தப் பாதிப்பும் இல்லை என்று அரசுத் தரப்பில் கூறப்பட்டுள்ளது.