சென்னை: சென்னையில் உள்ள பிரபல தனியர் விடுதியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட மத்திய உணவு, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வானைச் சந்திக்கச் சென்ற தமிழக பாஜக தலைவி தமிழிசை, அங்கு ஒரு மேசை மீது தன் கைபேசியை வைத்துவிட்டு அமைச்சருக்கு வாழ்த்து தெரிவித்தார்.
பிறகு கைபேசியை எடுக்கப்போனபோது அதைக் காணவில்லை. போலிசில் புகார் தெரிவிக்கப்பட்டு இருப்பதாக தமிழிசை தரப்பில் கூறப்பட்டது.