சென்னையிலிருந்து ப. பாலசுப்பிரமணியம்
கம்பீரத்துடனும் சற்றும் சிரிக்கா மலும் 'பாகுபலி' வில்லனைப் போலவே காட்சியளித்தார் சென்னையில் நடந்த சைமா செய்தியாளர் கூட்டத்திற்கு வந்திருந்த ராணா டகுபதி. ஆனால், இவ்வாண்டின் சைமா விருதிற்கு பரிந்துரைக்கப்பட்டு இருக்கும் ராணா, தமிழ் முரசுக்கு அளித்த சிறப்பு பேட்டியின்போது சிரித்த முகத்துடன் பதிலளித்தார். அவரது கையின் மணிக் கட்டுப் பகுதியில் இருந்த கட்டை பற்றி விசாரித்தபோது 'பாகுபலி' படத்தின் இரண்டாம் பாக படப் பிடிப்பின்போது சண்டைக் காட்சியில் காயம் அடைந்ததாகச் சொன்னார்.
"பாகுபலி இரண்டாம் பாகப் படப்பிடிப்புக் காட்சிகள் இன்னும் தீவிரமாக இருக்கின்றன. முதல் பாகத்தைவிட இதில் அதிகமான சண்டைக் காட்சிகளை எதிர்பார்க்கலாம்," என்றார்.
'பாகுபலி' படத்தின் தாக்கம் தற்போது சீனா, தைவான், ஜெர்மனி போன்ற நாடுகளிலும் பரவி வருகிறது. இப்படம் தைவானில் மொழி பெயர்க்கப்பட்டு ஒரு நாளைக்கு குறைந்தது ஆறு காட்சிகள் திரை யிடப்படுவதாகவும் சீனாவில் கிட்டத்தட்ட சுமார் 5,000 திரையரங்கு களில் இப்படத்தை வெளியிடப்போவதாகவும் ராணா கூறினார். நாயகனோ அல்லது வில்லனோ எந்த வேடம் கொடுத்தாலும் மகிழ்ச்சியாக நடிப்பேன் என்று தெரிவித்த ராணா வாய்ப்புக் கிட்டினால் அஜித் படத்தில் வில்லனாக நடிக்க விருப்பம் உள்ளது என்றும் கூறினார்.
அஜித்திற்கு வில்லனாக நடிக்க விரும்புவதாகக் கூறினார் ராணா டகுபதி. படம்: திமித்தி டேவிட்