தெஹ்ரான்: காற்பந்து விளையாட்டரங்கத்துக்குள் நுழைய முயற்சி செய்த குற்றத்துக்காக ஆறு மாதச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டதால் நீதிமன்ற வாசலிலேயே தீக்குளித்த ஈரானிய பெண் அதனால் ஏற்பட்ட காயங்களால் மாண்டார்.
ஈரானில் காற்பந்து விளையாட்டரங்கங்களுக்குள் பெண்கள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது.
வாலிபால் போன்ற ஒருசில விளையாட்டுகள் நடைபெறும் அரங்குகளில் மட்டும் பெண்கள் நுழையலாம்.
தீக்குளித்த பெண்ணின் பெயர் சஹார் என்றும் தீக்களித்த பிறகு அவர் தெஹ்ரான் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டதாக வும் ஷஃபக்னா செய்தி நிறுவனம் தெரிவித்தது.
சிகிச்சை பலனின்றி சஹார் உயிரிழந்ததாகவும் சஃபக்னா செய்தி நிறுவனம் கூறியது.