புனே: நாடு முழுவதும் '100 ஸ்மார்ட் சிட்டி'களை (பொலிவுறு நகரங்கள்) உருவாக்கப்படும் என்று மத்திய அரசு கடந்த ஆண்டு அறிவித்து இருந்தது. முதல் கட்டமாக 'ஸ்மார்ட் சிட்டி'க்கு தேர்வு செய்யப்பட்டுள்ள 20 நகரங்களின் பட்டியலை மத்திய அரசு வெளியிட்டது. அதில் முதல் கட்டமாக புனே, அகமதாபாத், புவனேஸ்வர், ஜபல்பூர், கொச்சி, காக்கிநாடா, ஜெய்ப்பூர்,சென்னை, கோவை உள்ளிட்ட 20 நகரங்கள் முதற்கட்டமாக தேர்வு செய்யப்பட்டன.
ரூ.48,000 கோடி ஒதுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. முதல் கட்டமாக ரூ.1,770 கோடி நிதி ஒதுக்கப்பட்டு வளர்ச்சிப் பணிகள் தொடங்க உள்ளன. மராட்டிய மாநிலத்தின் புனேயில் நடைபெற்ற விழாவில் 'ஸ்மார்ட் சிட்டி' திட்டத்தை பிரதமர் மோடி நேற்று நேரடியாகச் சென்று துவங்கி வைக்கிறார். பிற நகரங்களில் காணொளிக் காட்சி மூலம் தொடங்கி வைக்கிறார். பிரதமர் கலந்துகொள்ளும் காட்சியை பாரதிய ஜனதாவை தவிர அனைத்து உள்ளூர் அரசியல் கட்சிகளும் புறக்கணிக்க திட்டமிட்டுள்ளன. என்சிபி, காங்கிரஸ், சிவசேனா எம்.என்.எஸ் ஆகிய கட்சிகள் மத்திய அரசு உரிய மரபுகளை பின்பற்றவில்லை என்று கூறி விழாவை புறக்கணிக்க முடிவு செய்துள்ளன.