காபூல்: ஆப்கானிஸ்தானின் தலைநகர் காபூலுக்கு அருகே போலிஸ் வாகனங்கள் மீது தலிபான் போராளிகள் நடத்திய தாக்குதலில் குறைந்தது 30 பேர் கெல்லப்பட்டதாகவும் 40 பேர் காயம் அடைந்ததாகவும் அதி காரிகள் தெரிவித்துள்ளனர். காபூலின் மேற்கு புறநகர் பகுதியில் இருந்து காவலர்களை ஏற்றிவந்த வாகனம் வியாழக் கிழமை திடீரென வெடித்துச் சிதறியது. கார் குண்டு அல்லது தற்கெலைப் படைத் தாக்குதல் மூலம் பேலிஸ் வாகனம் தகர்க்கப்பட்டிருக்கலாம் எனத் தெரிகிறது.
தாக்குதல் குறித்து விசாரணை நடந்து வரும் நிலையில் அந்தத் தாக்குதலுக்கு தாங்கள் பெறுப்பேற்பதாக, தலிபான் குழு அறிவித்துள்ளது. ஆப்கானில் ஏப்ரல் மாதத்திற்குப் பிறகு பாதுகாப்புப் படையினர் மீது நடத்தப்பட்ட மோசமான தாக்குதல் இது என்று கூறப் பட்டது. இம் மாதத் தொடக்கத்தில் காபூலில் ஒரு பேருந்து தாக்கப் பட்டதில் நேப்பாள நாட்டைச் சேர்ந்த பாதுகாப்பு காவலர்கள் 14 பேர் கொல்லப்பட்டனர்.
குண்டு வெடிப்பில் சேதமடைந்த ஒரு பேருந்து அருகே போலிசார் கூடியுள்ளனர். படம்: ஏஎஃப்பி