சென்னை: இருசக்கர வாகன பயணியான சுபஸ்ரீ என்ற பெண், சென்னை பள்ளிக்கரணையில் கடந்த செப்டம்பர் மாதம் 12ஆம் தேதி சாலை நடுவே வைக்கப்பட்டிருந்த பதாகை விழுந்ததன் காரணமாக மாண்டார்.
இந்த விவகாரம் தொடர்பில் கைது செய்யப்பட்ட அதிமுக முன்னாள் கவுன்சிலர் ஜெயகோபாலுக்கு சென்னை உயர் நீதிமன்றம் நேற்று நிபந்தனையுடன் பிணை வழங்கி உத்தரவிட்டது.
ஏழை மக்கள் பயன்பெறும் வகையில் சென்னை புற்றுநோய் மருத்துவமனைக்கும் ஸ்டான்லி மருத்துவமனைக்கும் தலா ரூ. 25,000 கொடுக்கும்படி ஜெயகோபாலுக்கு நீதிபதி உத்தரவிட்டார்.
45 நாட்களுக்கும் மேலாக சிறையில் இருந்து வந்துள்ள ஜெயகோபால், ஆலந்தூர் நீதிமன்றத்தில் இருந்து அழைப்பாணை வரும் வரை மதுரையில் தங்கியிருந்து அங்குள்ள காவல் நிலையத்தில் அன்றாடம் கையெழுத்திட வேண்டும் என்று நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.