பியோங்யாங்: வடகொரிய விமானப்படையினரின் பயிற்சியை நேரில் சென்று பார்வையிட்டார் அந்நாட்டு தலைவர் கிம் ஜோங் உன்.
தென்கொரியாவும் அமெரிக்காவும் கூட்டு ராணுவப் பயிற்சியில் ஈடுபட போவதாக கூறப்பட்ட நிலையில் வடகொரியாவில் பாராசூட் வீரர்கள் கடந்த சில தினங்களாக தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த பயிற்சியை கடந்த 3 நாட்களில், 2 முறை அதிபர் கிம் ஆய்வு செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
தென்கொரியா, அமெரிக்கா கூட்டு ராணுவ பயிற்சி தள்ளிவைக்கப்பட்டுள்ள நிலையிலும் வடகொரியா இவ்வளவு தீவிரமாக போர் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது.
போர்காலத்திற்கான பாவனை பயிற்சி என்பது மேம்பட்ட வகையில் தாங்கள் தயாராக உதவும் என்று வடகொரிய தலைவர் கிம் ஜோங் உன் கூறியதாக வடகொரியாவின் அதிகாரபூர்வ கேசிஎன்ஏ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.