சென்னை: சென்னை ஐஐடி மாணவி பாத்திமா லத்தீப் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் தொடா்பாக புதிதாக வழக்குப் பதிவு செய்து, விசாரணையைத் தொடங்கிய மத்திய குற்றப்பிரிவு தனிப்படை அதிகாரிகள் கேரளா விரைகின்றனர்.
மத்திய குற்றப்பிரிவு அலுவலகத்தில் விசாரணைக்கு நேரில் வருமாறு ஐஐடி பேராசிரியர்கள் மூன்று பேருக்கு அழைப்பாணை அனுப்பப்பபட்டு அவர்கள் மூன்று பேரையும் தனி இடத்தில் வைத்து அதிகாரிகள் விசாரிக்கிறார்கள்.
இந்த நிலையில், பாத்திமாவின் தாய் மற்றும் சகோதரியிடம் விசாரணை நடத்த மத்தியக் குற்றப்பிரிவு தனிப்படை கேரள மாநிலம் கொல்லம் விரைகிறது.
இந்த விவகாரத்தில் நீதி வேண்டும் என்று ஐஐடி மாணவர்களும் உண்ணாவிரதம் போன்ற ஆர்ப்பாட் டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.