மார்சிலிங்-இயூ டீ நகர மன்றம் அண்மையில் வெளியிட்ட போலிஸ் அறிவுரை தொடர்பான செய்திமடல் ஒன்றின் தமிழ் மொழிபெயர்ப்பில் பிழை ஏற்பட்டதற்கு அந்நகர மன்றம் மன்னிப்புக் கேட்டுக்கொண்டுள்ளது.
இது தொடர்பாக ஊடகங்கள் எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலளித்த அந்நகர மன்றப் பேச்சாளர் ஒருவர், அச்செய்திமடலை அச்சடிப்பதில் ஏற்பட்ட கோளாற்றின் காரணமாக இந்தப் பிழை ஏற்பட்டதாகத் தெரிவித்தார்.
‘MY Kampung’ எனப்படும் அச்செய்திமடலில் திருத்தங்களைச் செய்து மார்சிலிங்-இயூ டீ குழுத் தொகுதியில் உள்ள ஒவ்வொரு வீடமைப்பு வளர்ச்சிக் கழக வீட்டிற்கும் அந்நகர மன்றம் அதை மறுபடியும் அனுப்பும்.
“திருத்தம் செய்யப்பட்ட செய்திமடலுடன், ஏற்கெனவே அதில் ஏற்பட்ட எழுத்துப் பிழைக்காக மன்னிப்புக் கோரும் கடிதம் ஒன்றும் இணைக்கப்படும்.
“இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நிகழாமல் இருக்க ஆவனச் செய்வோம்,” என்று அப்பேச்சாளர் கூறினார்.