சென்னை: குளிர் பிரதேசங்களில் மதுவிலக்கை அமல்படுத்துவது சாத்தியமில்லை என்று மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், போதை சாக்லேட்டுகளை விற்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றார். "வெப்பமான பகுதிகளில்தான் மதுவிலக்கை அமல்படுத்த முடியும். எனவே நாடு முழுவதும் மதுவிலக்கை அமல்படுத்துவது சாத்தியமற்ற ஒன்று.
"கஞ்சா சாக்லேட் பிஞ்சுகளின் உள்ளத்தில் நஞ்சை விதைப்பது போன்றது. அத்தகைய சாக்லேட்டுகளின் விற்பனையைத் தடுக்க, தமிழக அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். கஞ்சா சாக்லேட் விற்பவர்கள் மீது, பிணையில் வெளிவர முடியாத பிரிவுகளின் கீழ் வழக்கு தொடர வேண்டும். கச்சத்தீவை மீட்பதென்பது தேவையற்ற நடவடிக்கை," என்றார் பொன். ராதாகிருஷ்ணன்.