சிட்னி: ஆஸ்திரேலியாவில் காட்டுத் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த விமானம் ஒன்று விபத்துக்கு உள்ளானதில் அதில் இருந்த அமெரிக்கர்கள் மூவரும் உயிரிழந்தனர்.
தண்ணீரைச் சுமந்து சென்று தீயணைப்புப் பணிகளில் உதவக்கூடிய அந்த ஹெர்குலிஸ் சி-130
‘ஏர் டேங்கர்’ விமானம் கனடாவுக்குச் சொந்தமானது எனத் தெரிவிக்கப்பட்டது. நியூ சௌத் வேல்ஸ் மாநிலத்தில் ஆல்பைன் வட்டாரத்தில் காட்டுத் தீயை அணைக்கும் பணியில் அந்த விமானம் ஈடுபட்டிருந்தது என்றும் அது விழுந்து நொறுங்கியதற்கான காரணம் தெரியவில்லை என்றும் ஆஸ்திரேலிய அதிகாரிகள் தெரிவித்தனர். விமானம் தரையில் விழுந்து நொறுங்கிய வேகத்தில் அவ்விடத்தில் பெரும் தீப்பந்து எழும்பியதாக முதற்கட்டத் தகவல்கள் கூறுகின்றன.