பெக்கன்பாரு: இந்தோனீசியாவின் சுமத்ரா தீவை ஒட்டியுள்ள கடல் பகுதியில் நேற்று ஊழியர்களை ஏற்றிச் சென்ற படகு ஒன்று மூழ்கியது. அதில் பயணம் செய்த 20 பேரில் பத்துப் பேர் மீட்கப்பட்டனர் என்றும் எஞ்சியவர்களைக் காணவில்லை என்றும் இந்தோனீசிய அதிகாரிகள் தெரிவித்தனர். அவர்களைத் தேடி மீட்கும் பணி முடுக்கிவிடப்பட்டுள்ளது. மலேசியாவை நோக்கிச் சென்று கொண்டிருந்தபோது, திடீரென ஏற்பட்ட ராட்சத அலைகளில் படகு சிக்கி கடலில் மூழ்கியதாகக் கூறப்படுகிறது. படகில் பயணம் செய்த அனைவரும் கள்ளக்குடியேறிகள் என்று இந்தோனீசிய காவல்துறை தெரிவித்தது. இந்தோனீசியர்கள் பிழைப்புத் தேடி கள்ளத்தனமாக மலேசியாவுக்குள் குடியேறும் சம்பவங்கள் அடிக்கடி நிகழ்கின்றன. அதற்காக அவர்கள் சிறிய படகுகளில் உயிரைப் பணயம் வைத்து ஆபத்தான பயணங்களை மேற்கொள்வது வழக்கமாக இருந்து வருகிறது.
சுமத்ரா: படகு மூழ்கி பத்துப் பேர் மாயம்
24 Jan 2020 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 24 Jan 2020 11:52
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
மூத்த ஊடகவியலாளர் செ.ப.பன்னீர்செல்வத்திற்கு ‘கணையாழி’ விருது
மே 3, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்
கீழடி அகழ்வாய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணாவுடன் ஒரு கலந்துரையாடல்
சப்தஸ்வரம் காணொளித் தொடர் (ஐந்தாம் பாகம்): இசைக்கருவிகளைப் பழுதுபார்க்கும் திரு ஜோதிபிரகாஷ்
மலேசியாவில் $3 பில்லியன் முதலீடு செய்யும் மைக்ரோசாஃப்ட்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!