நாட்டில் வூஹான் கிருமித் தொற்று தொடர்பில் முதல் மூன்று சம்பவங்கள் உறுதிசெய்யப்பட்டுள்ள நிலையில், ‘எஸ்எம்ஆர்டி’ மற்றும் ‘கம்ஃபர்ட்டெல்குரோ’ நிறுவனங்கள் சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை நடப்புக்குக் கொண்டு வந்துள்ளன.
இதையடுத்து பயணிகளுக்காக எம்ஆர்டி நிலையங்களிலும் பேருந்து நிலையங்களிலும் கிருமி நாசினி திரவம் வைக்கப்பட்டுள்ளது. அத்துடன் டாக்சி, பேருந்து ஓட்டுநர்களுக்காக முகக் கவசங்களையும் கிருமி நாசினியையும் ‘கம்ஃபர்ட்டெல்குரோ’ இருப்பில் சேர்த்து வருகிறது. அத்துடன் சீனாவின் ‘ஹுபெய்’ பகுதிக்குப் பயணம் மேற்கொள்வதைத் தவிர்க்குமாறு இரு நிறுவனங்களின் ஊழியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. டாக்சிகளை அடிக்கடி சுத்தம் செய்யவும் ஓட்டுநர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.