பெய்ஜிங்: கொரோனா கிருமி பரவலைச் சமாளிக்க எல்லா வளங்களும் சீனாவிடம் உள்ளதாக அந்நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சர் வாங் யீ தெரிவித்துள்ளார்.
தற்போது சீனாவில் இக்கிருமித்தொற்றால் பலியானவர்கள் எண்ணிக்கை 106ஆக அதிகரித்துள்ளது. சுமார் 4,515 பேர் இந்த வைரஸ் தாக்குதலால் பாதிக்கப்பட்டுள்ளனர் என சீன சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் கரோனா வைரஸ் தொடர்பாக நடந்த கூட்டத்தில் சீன வெளியுறவுத் துறை அமைச்சர் வாங் யீ பங்கேற்றார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய வாங் யீ, “கொரோனா கிருமித்தொற்றை எதிர்கொள்ள அனைத்து வளங்களும் சீனாவிடம் உள்ளன,” என்றார்.
இதனால் சீனாவில் பள்ளிகளில் தேர்வுகள் அனைத்தும் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.