வியட்னாமில் 10,000 பேருக்கு தனிமை நடவடிக்கை
14 Feb 2020 06:10 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 14 Feb 2020 09:46
வியட்னாம்: வியட்னாம் தலைநகர் ஹனோய்க்கு அருகில் உள்ள கிராமங்களில் 10,000 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அங்கு கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்ட அறுவர் கண்டுபிடிக்கப்பட்டதால் இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
“பிப்ரவரி 13ஆம் தேதியிலிருந்து சொன் லோய் நகரில் விவசாயத்தை வாழ்வாதாரமாகக் கொண்ட கிராம மக்கள் 20 நாட்களுக்குத் தனிமைப்படுத்தப்படுவார்கள்,” என்று அரசாங்க அமைப்புகள் தெரிவித்தன. 2020-02-14 06:00:00 +0800