மெல்பர்னில் நடைபெற்று வரும் ஆஸ்திரேலியப் பொது விருது டென்னிஸ் போட்டியின் 8வது நாளான நேற்று முன்தினம் ஓற்றையர் பிரிவில் 4வது சுற்று ஆட்டங்கள் நடைபெற்றன. ஆடவர் பிரிவில் 13வது இடத் தில் உள்ள கனடாவின் மிலோஸ் ரயோனிக்கிடம் 6-4, 6-3, 5-7, 4-6, 6-3 என்ற செட் கணக்கில் தரவரிசையில் 4வது இடத்தில் உள்ள சுவிட்சர்லாந்தின் வாவ் ரிங்காவை (படம்) தோற்கடித்து காலிறுதிக்கு முன்னேறினார்.
2014ஆம் ஆண்டு வெற்றி யாளர் பட்டம் வென்ற வாவ்ரிங் காவை வீழ்த்த ரயோனிக் சுமார் 3 மணி நேரம் 45 நிமிடங்கள் போராடினார். தரவரிசையில் 2வது இடத்தில் உள்ள இங்கி லாந்தின் ஆன்டி முர்ரே 6-4, 6-4, 7-6(4) என்ற நேர்செட்டில் 17வது இடத்தில் உள்ள ஆஸ்திரே லியாவின் பெர்னார்டு டாமிக்கை வீழ்த்தி காலிறுதியில் நுழைந் தார்.