தோக்கியோ: ஜப்பானியத் தலைநகர் தோக்கியோவில் கொரோனா கிருமித்தொற்றைக் கட்டுப்படுத்தும் நடைமுறைகள் நாளை மறுதினம் முதல் மேலும் தளர்த்தப்பட இருப்பதாக அந்நகர ஆளுநர் யுரிக்கோ கொய்க்கே தெரிவித்துள்ளார்.
அதன் ஒரு பகுதியாக, பள்ளிகள், உடற்பயிற்சிக்கூடங்கள், திரையரங்குகள் கட்டங்கட்டமாக திறக்கப்படவுள்ளன என்று அவர் கூறினார்.