வரும் ஜூன் மாத இறுதியில் நடைபெறத் திட்டமிடப்பட்டுள்ள ஜி7 மாநாடு ஒத்திவைக்கப்படும் என அமெரிக்க அதிபர் டோனல் டிரம்ப் அறிவித்திருக்கிறார். இம்மாநாட்டிற்காக வழக்கமாக அழைக்கப்படும் நாடுகளுடன் ஆஸ்திரேலியா, ரஷ்யா, தென்கொரியா, இந்தியா ஆகிய நாடுகளையும் அழைக்க விரும்புவதாகக் கூறினார்.
தற்போதைய ஜி7 அமைப்பு, காலத்திற்கு ஒவ்வாத பழைய முறைமையைக் கொண்டிருப்பதாக திரு டிரம்ப் குறைகூறினார். "உலகத்தில் என்ன நடக்கிறது என்பதை த்ற்போதைய ஜி7 சரியாகப் பிரதிபலிப்பதில்லை என நான் கருதுகிறேன். எனவே இந்த உச்சநிலைச் சந்திப்பை ஒத்திவைக்கிறேன்," என்று அவர் கூறினார்.
அமெரிக்கா, இத்தாலி, ஜப்பான், கனடா, பிரான்ஸ, ஜெர்மனி, பிட்டன் மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் ஜி7 அமைப்பில் உறுப்பினர்களாக உள்ளன.
இம்மாநாட்டில் நேரடியாகக் கலந்துகொள்வதற்காக திரு டிரம்ப் கொடுத்திருந்த அழைப்பை ஜெர்மனியின் பிரதமர் ஏங்கலா மெர்க்கல் ஏற்க மறுத்ததாகச் செய்தி முன்னதாக, வெளிவந்தது. தற்போதைய கொரோனா கிருமிப்பரவலால் திருவாட்டி மெர்க்கல் மட்டுமின்ற பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவும் இந்த மாநாட்டில் நேரடியாகக் கலந்துகொள்ள மறுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.