டெல்லி நகரிலிருந்து மும்பைக்கு செல்லப் பிராணிகளைக் கொண்டு செல்ல தனியார் சிறப்பு விமானச் சேவை ஒன்று தயாராக இருக்கிறது.
மனிதனோ விலங்கோ, இந்தியாவில் தற்போது நிலவு முடக்கநிலையால் பல உயிரினங்கள் அந்நாட்டின் வெவ்வேறு பகுதிகளில் வீடு திரும்ப முடியாமல் சிக்கித் தவிக்கின்றன. தங்களது செல்லப்பிரணிகளைவிட்டு பிரிந்து வாடும் உரிமையாளர்களுடன் அவற்றை ஒன்றுசேர்க்கும் திட்டத்தை தீபிகா சிங் என்பவர் ஆரம்பித்துள்ளார்.
விலங்குகளைச் சரக்கு பெட்டிகளுடன் விமானத்தில் கொண்டு செல்லும் முறைக்கு பதிலாக அவர்களைப் பாதுகாப்புடன் விமானப் பயணிகளைப் போலவே தத்தம் இல்லங்களில் சேர்க்கும் தனியார் விமானச் சேவையை 25 வயது திருவாட்டி சிங் தெரிவித்தார்.
'எக்கிரெஷன் ஏவியேஷன்' என்ற விமான தயாரிப்பு நிறுவனத்துடன் இணைந்து பணியாற்றி இந்தத் திட்டத்தை இவர் செய்து முடித்திருக்கிறார். ஆயினும் ஒவ்வொரு பிராணியையும் கொண்டுபோவதற்கான கட்டணம் 1.6 லட்சம் ரூபாய்.
இதில் பயணம் செய்யும் பிராணிகளுக்கும் வெப்பநிலை சோதிக்கப்படும்; நம்மைப் போலவே பாதுகாப்பு இடைவெளியைக் கடைப்பிடிக்கும்!