அமெரிக்காவில் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக நடைபெறும் போராட்டங்களை ஆண்டிஃபா இயக்கத்துடன் பிணைக்கப்பட்ட வெளிநாட்டு சக்திகளும் தீவிரவாத கிளர்ச்சியாளர்களும் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டு வன்முறை சம்பவங்களைத் தூண்டுவதாகவும் அதற்கு தங்களிடம் ஆதாரம் உள்ளதாகவும் அமெரிக்க தலைமை சட்ட அதிகாரி வில்லியம் பார் கூறியுள்ளார்.
உள்நாட்டுப் பாதுகாப்புத் துறையின் அறிக்கையை ஆராய்ந்த பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த அவர் இவ்வாறு சொன்னார்.
இதற்கிடையே போராட்டங்களின் போது வன்முறை மற்றும் அழிவை ஏற்படுத்த திட்டமிட்டதாக தீவிர வலதுசாரி “பூகலூ” இயக்கத்தின் மூன்று உறுப்பினர்கள் மீது லாஸ் வேகஸில் உள்ள கூட்டாட்சி வழக்கறிஞர்கள் கடந்த புதன்கிழமையன்று குற்றஞ்சாட்டியிருந்தனர்.