புதுடெல்லி: கொரோனா கிருமித்தொற்று காரணமாக உலக நாடுகள் பலவும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. இந்தியாவின் நிலை மிகவும் மோசமாக இருக்கிறது.
இருந்தாலும் இந்தியாவைப் பொறுத்தவரை இந்தத் தொற்று அந்த நாட்டுக்கு இப்போது ஒரு வாய்ப்பை ஏற்படுத்தித் தந்து இருப்பதாக உலக சுகாதார நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
இப்போதைய காலநிலையைச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு இந்தியா தன்னுடைய சுகாதாரப் பராமரிப்புத் திட்டத்தை மேம்படுத்த முடியும் என்று உலக சுகாதார நிறுவனத்தின் தலைவர் டெட்ரோஸ் குறிப்பிட்டார்.
குறிப்பாக அடிப்படை சுகாதாரப் பராமரிப்பில் இந்தியா ஒருமித்த கவனத்தைச் செலுத்தலாம் என்று அவர் கூறினார்.
இந்தியாவில் கொவிட்-19 பாதிப்பு நாள்தோறும் கூடி வருவது பற்றி கருத்து கேட்டபோது உலக அமைப்பின் தலைவர் இவ்வாறு தெரிவித்தார்.