மலேசியாவின் பத்துமலையிலுள்ள ஓர் இந்துக் கோயில், சில கேளிக்கை விடுதிகள், காவல் நிலையங்கள் ஆகியவற்றில் தாக்குதல் மேற்கொள்ளத் திட்டமிட்டதாக ஐஎஸ் தீவிரவாதிகள் என சந்தேகிக்கப்படும் 3 பேரை மலேசிய தீவிரவாதத் தடுப்புப் போலிசார் நேற்று முன்தினம் கைது செய்துள்ளனர். மலேசியாவின் தேசிய தினத் திற்கு முந்தைய நாளில் வெடிகுண்டு, துப்பாக்கி போன்ற ஆயு தங்களால் மேற்கண்ட இடங்களில் தாக்குதல் நடத்த இந்த மூவரும் திட்டமிட்டிருந்தது தெரிய வந் துள்ளது. புக்கிட் அமான் தீவிரவாதத் தடுப்புப் பிரிவு அதிகாரிகளால் சிலாங்கூர், பாகாங் ஆகிய நகரங்களில் கடந்த வாரம் சனி, ஞாயிறு ஆகிய நாட்களில் அவர் கள் கைதுசெய்யப்பட்டனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகப் பேர்வழிகள் மூவரும் இந்தத் தாக்குதல் மேற்கொள்வதற்கு ஐஎஸ் தீவிரவாதி முகமது வாண்டி முகமது ஜெடி என்பவர் ஆணை பிறப்பித்துள்ளது விசாரணையில் தெரிய வந்துள்ளதாக காவல்துறை தலைமை அதிகாரி காலிட் அபு பக்கர் கூறினார். ஆகஸ்ட் 27ஆம் தேதி 20 வயது ஆடவர் கைது செய்யப்பட்டு சிலாங்கூரில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார். இவரிடம் கே75 ரக கையெறி குண்டு, கைத்துப்பாக்கி, 9மிமி துப்பாக்கிக் குண்டுகள் ஆகியவை கைப்பற்றப்பட்டதாக அந்த அதிகாரி தெரிவித்தார். ஐஎஸ் தீவிரவாதியான முகமது வாண்டிக்கும் இவருக்கும் இடையே இன்னொருவர் உள்ளதாகவும் அவரே இந்த ஆடவருக்கு ஆயுதங்களை வழங்கியிருக்க வேண்டும் என்று நம்பப்படுவதாகவும் அதிகாரி காலிட் தனது அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளார்.
ஆகஸ்ட் 29ஆம் தேதி கைதுசெய்யப்பட்டு தடுத்து வைக்கப் பட்டுள்ள மற்ற இரண்டு சந்தேகப் பேர்வழிகளில் ஒருவருக்கு வயது 20, மற்றவருக்கு வயது 27. இவர்கள் மூவருமே தங்களுக்கு அளிக்கப்பட்டுள்ள தாக்குதல் இலக்கை நிறைவேற்றியபின் சிரியாவுக்குச் செல் வதற்குத் திட்டமிட்டிருந்தனர் என்று திரு காலிட் தெரி வித்தார்.