சாத்தான்குளம்: விசாரணைக் கைதிகளான தந்தையும் மகனும் கோவில்பட்டி சிறையில் அடுத்தடுத்து உயிரிழந்த சம்பவம் தொடர் பில், ஐந்து போலிசார் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சாத்தான்குளம் காவல் ஆய்வா ளர் ஸ்ரீதர், உதவி காவல் ஆய்வாளர்கள் ரகு கணேஷ், எஸ்.ஐ. பால கிருஷ்ணன், தலைமை காவலர் முருகன், காவலர் முத்துராஜ் ஆகிய ஐந்து காவலர்களையும் சிபிசிஐடி போலிசார் கைது செய்துள்ளனர்.
இந்த கைது நடவடிக்கையில் இன்னும் சிலர் சிக்கக்கூடும் என்றும் கூறப்படுகிறது.
இந்நிலையில், போலிசார் ஐவர் மீதும் ஐபிசி 302வது பிரிவின்கீழ் கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளதால், அவர்கள் தங்களது காவல்துறை பணியை இழக்கும் நிலையும் ஏற்பட்டுள்ளது.
ஐந்து காவலர்களும் கைதான சம்பவம் அனைத்து தரப்பு மக்களிடமும் பெரும் வரவேற்பை பெற்றுள்ள நிலையில், சாத்தான்குள மக்கள் சிபிசிஐடி காவல்துறையினரின் முதற்கட்ட கைது நடவடிக்கைக்கு நன்றி தெரிவித்து பட்டாசுகளை வெடித்துக் கொண்டாடினர்.
இதற்கிடையே, சாத்தான்குளம் சம்பவத்துடன் தொடர்புடையவர்க ளுக்கு தண்டனை பெற்றுத்தர வேண்டும் என்பதே தமிழக அரசின் நிலைப்பாடாக உள்ளதாக ெதரிவித்துள்ள சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம், “கணவனை, ஒரு மகனை இழந்து நிற்கும் குடும்பத்தின் வலியை நாங்களும் உணர்கிறோம்,” என்று கூறியுள்ளார்.
இவ்வழக்கில் தொடர்புடைய அத்தனை பேர் மீதும் நீதித்துறை தக்க நடவடிக்கை எடுக்கும் என்று நம்புவதாக உயிரிழந்த பென்னிக் சின் சகோதரி தெரிவித்தார்.
இதற்கிடையே, இவ்வழக்கில் ஏற்கெனவே தலைமைக் காவலர் ரேவதி சாட்சியாக மாறிய நிலை யில், சாத்தான்குளம் சிறப்பு உதவி ஆய்வாளர் பால்துரையும் ‘அப்ரூவர்’ ஆகிறார் எனத் தகவல்கள் தெரி வித்து உள்ளன.