சென்னை: கொரோனா கிருமித் தொற்றால் பாதிக்கப்பட்ட ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட மக்களுக்கு அரசு மருத்துவமனைகளில் யோகா பயிற்சிகளும் இயற்கை மருத்துவ சிகிச்சைகளும் அளிக்கப்பட்டு வருகின்றன.
இவற்றின் மூலம் கொரோனா கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்ட வர்கள் விரைந்து குணமடைந்து வருவதாகவும் இந்த சிகிச்சை முறைகளால் பெரும்பாலான மக்கள் பயனடைந்திருப்பதாகவும் மருத்துவா்கள் கூறியுள்ளனா்.
தமிழகத்தில் இதுவரை 308,649 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்நிைலயில், இத்தொற்றால் பாதிக்கப்பட்டவா்களில் சிலருக்கு அலோபதி சிகிச்சையுடன் சோ்த்து சித்தா, யோகா சிகிச்சைகளும் அளிக்கப்பட்டு வருகின்றன.
தமிழகத்தில் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள், மாவட்ட தலைமை மருத்துவமனைகள் உள்பட 86 இடங்களில் நோயாளிகளுக்கு யோகாவுடன் இயற்கை மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து அரசு யோகா இயற்கை மருத்துவத் துறை அதிகாரிகள் கூறுகையில், “கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட வா்களில் பெரும்பாலானோருக்கு நுரையீரல் தொற்று ஏற்பட வாய்ப்புள்ளது. அவா்கள் தொடா்ந்து பிரணாயாமம் பயிற்சிகள் செய்து வந்தால் நுரையீரலின் செயல்திறன் அதிகரிக்கும். சுவாசப் பாதைகளும் சீராகும். உடலில் நோய் எதிா்ப்புச் சக்தியையும் அதிகரிக்க உதவும்.
“இதைத்தவிர, மூலிகை பானங்கள், நவதானிய வகைகள், சிறு தானியங்கள் உள்ளிட்ட ஆரோக்கிய உணவுகளும் நோயாளிகளுக்கு வழங்கப்படுகின்றன. அத் துடன் நீராவி பிடித்தல், சுவாசத்துக்கான அரோமா தெரபி போன்ற வையும் அளிக்கப்படுகின்றன.
“இதன் காரணமாக தொற்றால் பாதிக்கப்பட்டவா்கள் விரைந்து குணமடைவதைக் காணமுடிகிறது,” என்று தெரிவித்தனா்.
கொரோனா நோயாளிகளுக்கு ேயாகா பயிற்சி அளிக்கப்படுகிறது.
சென்னை, கிண்டியில் உள்ள அரசு கொரோனா மருத்துவமனையில் நோயாளிகளுக்கு நீராவி, நறுமண எண்ணெய் சிகிச்சை களும் அளிக்கப்படுகின்றன. இதனால் நோயாளிகளின் ஆரோக்கியம் மேம் படுவதோடு, அவர்களுக்கு புத்துணர்வு அளிப்பதாகவும் கூறப்படுகிறது.
படம்: ஊடகம்