கடலூர்: தான் பெற்ற தேர்ச்சியை மாணவர் ஒருவர் வித்தியாசமாக ஃபேஸ்புக்கில் சுவரொட்டி போல் (படம்) வெளியிட்டுக் கொண்டாடியுள்ளார்.
கடலூர் மாவட்டம், காட்டுமன்னார் கோயி லைச் சேர்ந்த நிஷாந்த் என்ற மாணவர், தான் பத்தாம் வகுப்பில் அடைந்துள்ள தேர்ச்சியை மகிழ்ச்சியுடன் தெரிவிக்கும் விதமாக ஒரு சுவரொட்டியை வடிவமைத்து அதை ஃபேஸ் புக்கில் பதிவேற்றி உள்ளார்.
அதில், “என்னைப் பார்த்து ஏளனமாகச் சிரித்த ஆசிரியர்களுக்கு இந்த வெற்றியைச் சமர்ப்பிக்கிறேன்,” என்று குறிப்பிட்டுள்ளவர், என்னைத் தேர்ச்சி அடைய வைத்து வரலாற்றுச் சாதனை செய்துள்ள தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்களுக்கு நன்றி எனவும் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் கொரோனா கிருமித் தாக்கத்தை முறியடிக்க, கடந்த மார்ச் மாதம் 25ஆம் தேதி முதல் பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டது.
அதுமுதல் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. பத்தாம் வகுப்பு தேர்வும் ரத்து செய்யப்பட்டு மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.