ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி கன்னாவரம் விமான நிலையத்திலிருந்து தடப்பள்ளியில் உள்ள தம் வீட்டுக்கு காரில் சென்று கொண்டிருந்தார். அவரது பாதுகாவலர்களும் வேறு சில கார்களில் அவருடன் சென்றனர்.
இந்நிலையில், காயமடைந்த நபருடன் விஜயவாடாவை நோக்கி அவசர சிகிச்சை வாகனம் ஒன்று சென்றது. அதனையறிந்து, அந்த அவசர சிகிச்சை வாகனத்துக்கு வழிவிடுமாறு முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
அதிகாரிகளும் அந்த அவசர சிகிச்சை வாகனத்துக்கு வழிவிட்டு, பின்னர் முதல்வருடனான பயணத்தைத் தொடர்ந்தனர்.
மக்களின் தேவைகளுக்கு முன்னுரிமை அளித்த ஆந்திர முதல்வரின் இந்தச் செயலுக்கு பலதரப்புகளிலும் இருந்து பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளன.