பொகோடா: கொடிய ஜிக்கா கிருமியின் தாக்குதல் உலகையே அச்சுறுத்திக் கொண்டிருக்கும் நிலை யில் தென் அமெரிக்க நாடான கொலம்பியாவில் 2,000 கர்ப் பிணிகள் பாதிக்கப்பட்டிருப்பதாக அந்நாட்டு சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. தென்அமெரிக்கா, மத்திய அமெரிக்கா, கரிபீயன் நாடுகள் உட்பட இதுவரை 25க்கும் மேற்பட்ட நாடுகளில் ஸிக்கா கிருமி பாதிப்பு உள்ளது. இந்நாடுகளில் 400,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்தாண்டு அக்டோபர் மாதம் ஸிக்கா தொற்று குறித்து பிரேசில் எச்சரித்தது. அப்போதிலிருந்து இதுவரை பிரேசிலில் மட்டும் 150,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஸிக்கா பாதிப்பில் முதலிடம் பிரேசிலுக்கு. இரண்டாவது இடத்தில் கொலம்பியா உள்ளது.
இந்நிலையில், கொலம்பியாவில் 20,297 பேருக்கு ஸிக்கா வைரஸ் பாதிப்பு இருப்பதாகவும் இதில் 2,116 பேர் கர்ப்பிணிகள் என்றும் அந்நாட்டுச் சுகாதார நிறுவனம் அறிவித்துள்ளது. ஸிக்கா வைரஸ் பாதித்த கர்ப்பிணிகளுக்கு சிறிய தலை, மூளை பாதிப்பு, பார்வை குறை பாடு, நரம்பு மண்டல பாதிப்பு களுடன் குழந்தைகள் பிறக்கின் றன. இதனால் இப்போதைக்கு பெண்கள் கருத்தரிக்க வேண்டாம் என்று பிரேசில் உள்ளிட்ட நாடு கள் அறிவுறுத்தியுள்ளன. இவ்வாண்டு இறுதிக்குள் மூன்று முதல் நான்கு மில்லியன் பேர் ஸிக்கா கிருமியால் பாதிக்கப் படுவர் என்று ஐநாவின் உலகச் சுகாதார நிறுவனம் சென்ற வாரம் எச்சரித்து உள்ளது. இதற்கிடையே, 2015ஆம் ஆண்டில் ஸிக்கா கிருமி இந்தோனீசியாவுக்குப் பரவி விட்டது என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
கொலம்பியாவின் காலி நகரில் சுகாதார ஊழியர்கள் கிருமி நாசினியைத் தெளிக்கையில் குடியிருப்பார்கள் வீட்டுக்கு வெளியே காத்திருக்கின்றனர். படம்: ஏஎஃப்பி