மயிலாடுதுறை: தமிழகத்தில் இருந்து காணாமல் போன மூன்று வெண்கலச் சிலைகள் பிரிட்டனின் தலைநகர் லண்டனில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டு, மீட்கப்பட்டுள்ளன.
மயிலாடுதுறை மாவட்டம், அனந்தமங்கலத்தில் உள்ள ஒரு கோயிலில் இருந்த ராமர், லட்சு மணர், சீதையின் வெண்கலத் தால் ஆன சிலைகள் 1978ஆம் ஆண்டில் களவுபோயின.
இந்நிலையில், நான்கு ஆண்டு களுக்கு முன்பு லண்டனைச் சேர்ந்த வியாபாரி ஒருவர் இந்த மூன்று வெண்கலச் சிலைகளும் விற்பனைக்கு உள்ளதாக இணையத்தில் விளம்பரம் செய்துள்ளார்.
தமிழகத்தைச் சேர்ந்தவர் விஜயகுமார். இவர், சிங்கப்பூரில் வசித்து வந்த நிலையில், இந்த சிலைகள் குறித்த தகவலை தமிழக சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு போலிசாருடன் பகிர்ந்து கொண்டு உள்ளார்.
இதையடுத்து, சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு போலிசார் அதற்கான ஆதாரங்களை பிரிட்டிஷ் அரசுக்கு அனுப்பினர்.
இந்நிலையில், 42 ஆண்டுகளுக்குப் பிறகு அந்தச் சிலைகள் மீட்கப்பட்டு, இந்திய தூதரகத்தில் ஒப்படைக்கப்பட்டன.
இதைத்தொடர்ந்து, காணொளி வாயிலாக மத்திய கலாசார, சுற்றுச்சூழல் துறை அமைச்சர் பிரஹலாத் படேல் முன்னிலையில் தமிழக அரசின் பிரதிநிதிகளிடம் இந்தச் சிலைகள் ஒப்படைக்கப்பட்டன.