ஓசூர் அருகே நாகமங்கலம் கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் உள்ள நாகமங்கலம் ஏரி கடந்த 15 ஆண்டுகளாக போதிய மழையின்றி வறண்டு கிடக்கிறது.
இந்நிலையில், தங்கள் கிராமத்தில் மழை பொழிந்து நாகமங்கலம் ஏரி நிரம்பவேண்டும் என்று ஆயிரக்கணக்கான பொதுமக்கள் வழிபாடு நடத்தினர்.
இந்த வழிபாட்டின் ஒரு பகுதியாக, கிராம தேவதைகளை மேள தாளத்துடன், ஆடிப்பாடி ஏரிக்குக்கொண்டுவந்து, யாகம் வளர்த்து, பூஜைகள் செய்து 40க்கும் மேலானோர் சாட்டையடி வாங்கி விநோத வழிபாடு செய்தனர்.
இந்த ஏரியைச் சார்ந்துள்ள அயர்னப்பள்ளி, ஊடேதுர்க்கம் உள்ளிட்ட கிராம மக்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். ஏரி வறண்டுள்ளதால் விவசாயம், கால்நடை வளர்ப்பு பாதிக்கப்பட்டு குடிநீர் தட்டுப்பாடும் நிலவி வருகிறது.