சென்னை: தமிழகத்தின் அடுத்த முதல்வராக முதல்வர் பழனிசாமியை விடவும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தை சற்று கூடுதலான மக்கள் விரும்புவதாக தெரிவித்துள்ளனர். அதேேபால் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் நம்பிக்கைக்கு உரிய மனிதராகவும் ஓ.பன்னீர்செல் வத்தை அதிகமானோர் குறிப்பிட்டுள்ளனர். இவ்விவரங்கள் ஓர் ஆய்வு வழி தெரியவந்துள்ளது.
தமிழகத்தில் 16வது சட்டமன்றத் தேர்தல் அடுத்த ஆண்டு மே மாதம் நடைபெறும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், அதற்கான ஆயத்தப் பணிகளில் அரசியல் கட்சிகள் பலவும் இறங்கி உள்ளன. இதனால், இப்ேபாது சூடுபிடிக்கத் துவங்கியுள்ள தேர்தல் களத்தில் ஆளுங்கட்சி, எதிர்க்கட்சிக்கு இடையேதான் போட்டி நிலவுகிறது.
இந்நிலையில், எதிர்வரும் சட்ட மன்றத் தேர்தலை முன்னிட்டு மண் ஃபவுண்டேசன் எனும் அறக்கட்டளையும் சில தன்னார்வ அமைப்புகளும் இணைந்து தமிழகத்தின் 38 மாவட்டங்களிலும் கருத்துக்கணிப்புகளை நடத்தியுள்ளன.இதில், பொதுமக்கள், தொழிலாளர்கள், மாணவர்கள் என ஏழு லட்சம் பேர் கலந்துகொண்டனர்.
தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளிலும் ஒரு தொகுதிக்கு 3,000 பேர் என்ற எண்ணிக்கையில் மொத்தம் 702,000 பேரிடம் கருத்துக்கணிப்புகள் நடத்தப்பட்டன. அதன்படி, அடுத்து ஆட்சியை பிடிக்கப்போவது எந்தக் கட்சி என்ற கேள்விக்கு அதிமுக-50.2%, திமுக-35.6%, பிற கட்சிகள்-14.2% எனமக்கள் பதில் அளித்துள்ளனர்.
தமிழகத்தின் அடுத்த முதல்வராக யாரை விரும்புகிறீர்கள் என்ற கேள்விக்கு ஓபிஎஸ்-28.7%, இபிஎஸ்-27.9%, மு.க.ஸ்டாலின்-26.6%, ரஜினி-6.9%, அன்புமணி-6.2%, கமல்-3.7% பேரும் தேர்வு செய்துள்ளனர்.அதிமுகவிற்குப் பக்கபலமாக இருப்பது இரட்டை இலைச் சின்னம்-76.5%, ஜெயலலிதாவின் செல்வாக்கு-23.5% பேர் கூறியுள்ளனர். அதேபோல், அதிமுகவின் பலவீனமாக இரட்டைத் தலைமை என 65.4%, ஆளுமையற்ற தன்மை என 34.6% பேரும் தெரிவித்துள்ளனர்.
ஜெயலலிதாவின் நம்பிக்கைக்கு உரியவராக ஓபிஎஸ் இருப்பதாக 74.7% பேரும் இபிஎஸ் என 25.3% பேரும் கூறியுள்ளனர். அதிமுகவை பலப்படுத்த செய்ய வேண்டிய மாற்றம் குறித்து குறிப்பிடுகையில், ஒற்றைத்தலைமை -75.4%, சசிகலா தலைமை- 19.3%, சசிகலா-டிடிவி இணைப்பு என 5.3% பேரும் பதிவு செய்தனர். அதிமுகவின் ஆட்சி நன்றாக உள்ளதாக 21.7%, பரவாயில்லை என 49.4%, மோசம் என 28.9% பேரும் தெரிவித்துள்ளனர்.
திமுகவின் பலமாக உதயசூரியன் சின்னத்துக்கு 78.6%, கட்சியின் கட்டுக்கோப்புதான் காரணம் என 21.4%, பலவீனத்துக்கு கருணாநிதி இல்லாதே காரணம் என 66.2%, தலைமை சரியில்லை என 33.8% பேரும் வாக்களித்தனர். மு.க.ஸ்டாலின் முதல்வராகத் தகுதியானவர் என 41.6% பேரும் அவரிடம் கருணாநிதியின் ஆளுமை அறவே இல்லை என 42.8% பேரும் கட்சி பலமிழப்பதாக 13.4% பேரும் தெரிவித்துள்ளனர்.
ரஜினி, கமல் அரசியல் நுழைவு அரசியலில் மாற்றத்தை ஏற்படுத்துமா? என்ற கேள்விக்கு மாற்றம் நிச்சயம் வரும் என 13.1%, மாற்றத்திற்கு வாய்ப்பில்லை என 59.5%, வருகையே தேவையற்றது என 27.4% பேரும் தங்கள் எண் ணங்களைப் பதிவு செய்துள்ளனர். அதிமுக கட்சியின் இரட்டை இலைச் சின்னத்துடன் தமிழக முதல்வர் பழனிசாமி (இடது), துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம். படம்: தமிழக ஊடகம்
தமிழகத்தில் ஒரு தொகுதிக்கு 3,000 பேரிடம் நடுநிலையோடு கருத்து கேட்கப்பட்டது இதுவே முதல்முறை. இதன்மூலம் மக்களின் தெளிவான மனநிலையை வெளிக்கொணர வேண்டும் என்பதே இலக்கு.