ஹாங்காங்: ஆடவர் ஒருவர் கத்தியால் தாக்கப்பட்டதைத் தடுக்கும் நோக்கில் ஹாங்காங் போலிசார் சுட்டதில் மூவர் காயமுற்றனர். தாக்குதலில் ஈடுபட்ட இருவரும் கத்தியால் தாக்குண்ட ஒருவரும் காயமுற்ற அம்மூவர் என போலிசார் தெரிவித்தனர். கத்திகளைக் கொண்டிருந்த சுமார் ஆறு பேர் ஆடவர் ஒருவரைத் தாக்க முற்பட்டதாக போலிஸ் அதிகாரி மா வாய் ஹிங் கூறினார். யாவ் மா டெய் மாவட்டத்தில் உள்ள வர்த்தக நகரின் மையத்தில் இந்த சம்பவம் நிகழ்ந்தது. பொதுவாகப் பாதுகாப்பானதாகக் கருதப்படும் ஹாங்காங்கில் இத்தகைய வன்முறையுடன் கூடிய தெருச்சண்டை நடைபெற்றுள்ளது. சண்டையை நிறுத்துமாறு போலிசார் எச்சரித்ததை அவர்கள் நிராகரித்ததை அடுத்து நான்கு முறை சுட்டதாக போலிசார் கூறினர். காயமுற்ற மூவரும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
ஹாங்காங்கில் கத்திக்குத்தை நிறுத்த போலிஸ் துப்பாக்கிச்சூடு, மூவர் காயம்
3 Oct 2016 09:04 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 4 Oct 2016 06:59
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
மூத்த ஊடகவியலாளர் செ.ப.பன்னீர்செல்வத்திற்கு ‘கணையாழி’ விருது
மே 3, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்
கீழடி அகழ்வாய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணாவுடன் ஒரு கலந்துரையாடல்
சப்தஸ்வரம் காணொளித் தொடர் (ஐந்தாம் பாகம்): இசைக்கருவிகளைப் பழுதுபார்க்கும் திரு ஜோதிபிரகாஷ்
மலேசியாவில் $3 பில்லியன் முதலீடு செய்யும் மைக்ரோசாஃப்ட்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!