பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீஃப் அந்நாட்டு ராணுவத்தைப் பலவீனப்படுத்த முயற்சிப்பதாக நடப்புப் பிரதமர் இம்ரான்கான் சாடியுள்ளார்.
அம்முயற்சிக்கு நவாசுக்கு இந்தியா உதவி செய்வதாகவும் இன்ரான்கான் குற்றம் சாட்டியுள்ளார்.
“இது நவாஸ் ஷெரீஃப் விளையாடும் ஓர் ஆபத்தான விளையாட்டு. முன்பு அல்தாப் உசேன் இதே விளையாட்டை ஆடினார்.
"நவாஸ் ஷெரீஃப்புக்கு இந்தியா உதவுகிறது என்பதில் நான் 100 விழுக்காடு தெளிவாகவும் உறுதியாகவும் உள்ளேன்.
"பாகிஸ்தானை உடைக்க வேண்டும் என்பதே இந்தியாவின் ஒரே சிந்தனை,” என்று இம்ரான்கான் தெரிவித்துள்ளார்.