சிங்கப்பூரில் இன்று (அக்டோபர் 17) நண்பகல் நிலவரப்படி புதிதாக மூவருக்கு கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இங்கு கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 57,904 ஆகியுள்ளது.
உள்ளூர் சமூகத்தில் புதிதாக ஒருவருக்கு கிருமித்தொற்று பதிவாகியுள்ளது.
மற்ற இருவரில் ஒருவர் விடுதிவாசி; மற்றவர் வெளிநாட்டிலிருந்து வந்த பிறகு இங்கு தனிமைப்படுத்தப்பட்டவர்.
கூடுதல் விவரங்களை சுகாதார அமைச்சு பின்னர் வெளியிடும்.