ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகமும் ஆஸ்ட்ரா செனகா நிறுவனமும் இணைந்து உருவாக்கியுள்ள ‘கோவிஷீல்டு’ கொவிட்-19 தடுப்பூசி, இந்தியாவில் 50% விலையில் கிடைக்குமென தெரிகிறது.
இந்த தடுப்பூசி மருந்தின் பரிசோதனைகள் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளன.
அடுத்தாண்டு தொடக்கத்தில் பயன்பாட்டுக்கு வரும் என எதிர்பார்க் கப்படும் இந்த தடுப்பூசி மருந்தை இந்தியாவில் தயாரிக்கும் உரிமத்தை சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா நிறுவனம் பெற்றுள்ளது.