கொரோனா தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்ட நிலையில், சசிகலாவுக்கு கடுமையான நுரையீரல் தொற்று இருப்பதாகவும் தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் பெங்களூரு விக்டோரியா மருத்து வமனை தெரிவித்துள்ளது.
அவர் 10 முதல் 15 நாட்கள் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற வேண்டியிருக்கும் என கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில் அவர் மணிப்பால் மருத்துவமனைக்கு மாற்றப்பட உள்ளதாக நேற்று உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் கூறின.
சொத்துகுவிப்பு வழக்கில் சிறைத்தண்டனை பெற்று பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் இருந்த தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நெருங்கிய தோழியான சசிகலாவுக்கு புதன்கிழமை காய்ச்சலுடன் மூச்சுத்திணறலும் ஏற்பட்டு மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டார்.
இதனால் இம்மாதம் 27ஆம் தேதி அவர் விடுதலை ஆவது தாமதமாகலாம் என்ற செய்தி பரவியது. ஆனால், திட்டமிட்டபடி சசிகலா விடுதலை ஆவதில் எந்த சட்ட சிக்கலும் இல்லை என்று அவரது வழக்கறிஞர் அசோகன் கூறியுள்ளார்.