முஹம்மது ஃபைரோஸ்
இலங்கையில் நடந்த போர் குறித்தும் போரினால் அகதிகளாக புலம்பெயர்ந்த கிட்டத்தட்ட ஒரு மில்லியன் இலங்கைத் தமிழர்களின் வாழ்க்கையையும் யதார்த்த மான நடையில் இலக்கியங்களாகப் படைத்து வரும் ஷோபாசக்தி முக்கிய தமிழ்ப் படைப்பாளிகளில் ஒருவர். ஏறக்குறைய 30 ஆண்டு களாக எழுதி வரும் இவர் 23 ஆண்டுகளாக பிரான்சில் அகதியாக வசித்து வருகிறார். தனித்துவ அடையாளம் பெற்றுள்ள தமிழ் இலக்கியம் உலகின் சிறந்த இலக்கியங்களில் தமிழ் இலக்கியமும் இடம்பெற்று இருக்கிறது என்ற ஷோபாசக்தி, "லத்தீன், ஆங்கிலம், பிரெஞ்சு இலக்கியங்களுக்கு ஈடாக தமிழ் இலக்கியம் தனித்துவ அடையாளம் பெற்றுள்ளது, சாதனைகளைக் கொண்டுள்ளது," என்றார்.
கணினி தொழில்நுட்ப வளர்ச் சியால் அச்சிடுவது இலகுவாகி விட்டதால் நிறைய புத்தகங்கள் வெளிவருகின்றன. 15-20 ஆண்டுகளுக்கு முன், ஒரு எழுத் தாளர் புத்தகம் வெளியிட அவரு டைய ஆயுள் காலத்தையே செல விட வேண்டும். மனைவியின் தாலியை விற்று, சிறுநீரகத்தை விற்று புத்தகம் வெளியிட்டனர். ஒரு புத்தகத்தைக்கூட வெளியிட முடியாமல் மடிந்த எழுத்தாளர்களும் இருந்தனர்.
முழு விவரம் - அச்சுப்பிரதியில்