கோலாலம்பூர்: தேசிய அளவில் தடுப்பூசி போடும் திட்டம் முடுக்கிவிடப்பட்டதால் நாட்டின் வர்த்தகர்களுக்கு நம்பிக்கையளித்துள்ளது. எனவே, நாட்டின் பொருளாதாரம் நெருக்கடிச் சூழலில் இருந்து விரைவில் மீட்சிபெறும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார் பிரதமர் அலுவலக அமைச்சர் முஸ்தபா முகமது.
தொற்றுக்கு எதிராக அதிகமான மலேசியர்கள் தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளனர். இது அதிகமானோர் நம்பிக்கையுடன் வெளியில் சென்று பணம் செலவழிக்க வழிவகுத்துள்ளது. இந்தச் செய்தி, முடங்கிக்கிடக்கும் வர்த்தகர்களுக்கு நம்பிக்கையூட்டுவதாக உள்ளது என்று அமைச்சர் முஸ்தபா முகமது கூறினார்.