ஏலகிரி: சட்டமன்றத் தேர்தல் பட்டுவாடாவின்போது மிஞ்சிய பணம் அனைத்தும் திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் வீட்டில் பதுக்கப்பட்டிருப்பதாக சமூக ஊடகங்களில் தகவல் பரவியது.
இந்த தகவலை உண்மை என்று நம்பி, துரைமுருகனுக்குச் சொந்த மான ஏலகிரி பண்ணை வீட்டில் கொள்ளையர்கள் திருட முயற்சி செய்துள்ளனர்.
ஆனால், அவர்கள் வெறுங்கை யுடன் திரும்பிச் சென்றதாகவும் தங்களது அடையாளம் கண் காணிப்புக் கேமரா மூலம் தெரிந்துவிடக் கூடாது என்பதற்காக அதில் உள்ள வன்பொருளை களவாடிச் சென்றதாகவும் தகவல் கள் வெளியாகி உள்ளன.
திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் மட்டுமின்றி அவரது குடும்பத்தைச் சேர்ந்தோரும் கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டு, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், கொள்ளை முயற்சி நடந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ஏற்ெகனவே கொரோனா தடுப்பூசியைப் போட்டுக்கொண்டுள்ள துரைமுருகனுக்கு சில தினங்களுக்கு முன் கிருமித்தொற்று உறுதியானது. அத்துடன், அவரது மகன் கதிர் ஆனந்த், துரைமுருகனின் சகோதரர் உள்ளிட்டோருக்கும் தொற்று உறுதியானது.
சென்னை ரேலா மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டுள்ள துரைமுருகனின் உடல்நிலையை மருத்துவர்கள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.
அடிக்கடி ஓய்வுக்காக துரை முருகன் இந்த பண்ணை வீட்டில் தங்குவது வழக்கம். இந்த வீட்டில் திருவண்ணாமலை மாவட்டம், புனிகாந்தூர் பகுதியைச் சேர்ந்த பிரேம்குமாரும் அவரது மனைவி சங்கீதாவும் தங்கி பராமரித்து வருகின்றனர்.
நேற்று முன்தினம் கொள்ளை யர்கள் பண்ணை வீட்டின் பெரிய கதவை உடைத்து உள்ளே சென்றுள்ளனர். வீட்டுக்குள் பணம், நகைகள் ஏதும் கிடைக்காததால் வீட்டில் இருந்த பொருட்களான கட்டில், பீரோ, நாற்காலிகள், குளிர்பதனப் பெட்டி உள்ளிட்ட பொருட்களை எடுத்துச் செல்ல முயன்றுள்ளனர். ஆனால் அவை அனைத்தும் அதிக எடையில் இருந்ததால் எடுத்துச் செல்ல முடியாமல் ஏமாற்றமடைந்தனர்.
ஏலகிரிமலை காவல்துறையினர் கொள்ளையர்களைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.