கோவை: கோவையில் உணவகத்தில் சாப்பிட்டுக்கொண்டிருந்தவர்களை லத்தியால் தாக்கிய காவல் அதிகாரி முத்துவை பணியிடை நீக்கம் செய்து காவல் ஆணையர் டேவிட்சன் தேவாசீர்வாதம் உத்தரவிட்டுள்ளார்.
கோவை, காந்திபுரம் பேருந்து நிலையம் அருகே உள்ள உண வகத்தில் நேற்று முன்தினம் இரவு 10.20 மணிக்கு பயணிகள் சாப்பிட்டுக்கொண்டிருந்தனர். இரவு 11 மணிக்கு உணவகத்தை மூடவேண்டும் என்பதுதான் மாநில அரசின் உத்தரவு. இதனால், கடையின் கதவு பாதி மூடப்பட்டிருந்தது.
அப்போது உணவகத்திற்குள் வந்த காட்டூர் உதவி ஆய்வாளர் முத்து, வந்த உடனேயே லத்தியால் அடிக்கத் துவங்கினார். இதில் ஒரு பெண்ணுக்கு தலையிலும் மற்றொரு பெண்ணுக்கு கையிலும் என நான்கு பேர் காயம் அடைந்தனர்.
சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகள் காணொளியாக பரவிய தைக் கண்டு, முத்துவின் செயலுக்கு பலரும் கண்டனம் தெரிவித்தனர். உணவக உரிமையாளர் மோகன்ராஜும் காவல்துறை ஆணையரிடம் புகாரளித்தார்.