சென்னை: ஏர்செல், மேக்சிஸ் வழக்கில் தமக்கும் தனது குடும் பத்தாருக்கும் வீண் நெருக்கடி கொடுக்கும் வகையில் நடவ டிக்கை மேற்கொள்ளப்பட்டு இருப் பதாக முன்னாள் மத்திய அமைச் சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். தன் மகன் கார்த்தி சிதம்பரம் மீதான அமலாக்கத் துறையின் நடவடிக்கை அரசியல் ரீதியானது என்றும் தனக்கும் தனது குடும் பத்துக்கும் உள்ள நற்பெயரைச் சீர்குலைக்கும் நடவடிக்கை என் றும் அவர் மேலும் கூறியுள்ளார்.
ஏர்செல், மேக்சிஸ் வழக்கில் கார்த்தி சிதம்பரத்துக்கு சம்மன் அனுப்பியுள்ளது மத்திய அமலாக் கத்துறை. இதை ரத்து செய்யக் கோரி, அவர் உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார். அம்மனு நிலுவையில் உள்ள நிலையில், உயர் நீதிமன்றத்தில் ப.சிதம்பரம் புதிய மனு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளார்.
ப.சிதம்பரம்