டமாஸ்கஸ்: சிரியாவில் நடக்கும் உள்நாட்டுப் போரில் அரசாங்கப் படையினரிடம் அலெப்போ நகரம் வீழ்ச்சியடைந்தால் அது போர் முடிவடைய பேருதவி புரியும் என்று அந்நாட்டு அதிபர் பஷார் அல் ஆசாத் கூறியுள்ளார். ஆனால், வடக்கு சிரியாவில் உள்ள அலெப்போவில் போராளிக் குழுக்களுக்கு ஏற்படக்கூடிய தோல்வி போரை முற்றிலுமாக முடிவுக்குக் கொண்டுவந்து விடாது என்று அவர் தெரிவித்தார்.
அலெப்போ நகரில் பொது மக்கள் போர்ப் பகுதியிலிருந்து வெளியேற வசதியாக அங்கு ஐந்து நாட்களுக்கு போர்நிறுத்தம் அறிவிக்கப்பட வேண்டும் என்று அமெரிக்கா, ஐந்து மேற்கத்திய வல்லரசுகளுடன் போராளிகள் விடுத்த வேண்டுகோளை திரு ஆசாத் நிராகரித்தார்.