அனைத்துலக வெளிநாட்டு ஊழியர்கள் தினத்தை முன்னிட்டு தேசிய தொழிற்சங்க காங்கிரசின் அரசுசாரா அமைப்புகளான வெளிநாட்டு ஊழியர்கள் நிலையமும் வெளிநாட்டுப் பணிப் பண்கள் நிலையமும் சிறப்பு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்திருந்தன.
வெளிநாட்டு ஊழியர்கள், சிங்கப்பூருக்கு ஆற்றிவரும் உதவிகளை மதித்து, அவர்களுக்கு ஆதரவு தெரிவித்து, அவர்களைப் பெருமைப்படுத்தும் நோக்கத்துடன் அந்த நிகழ்ச்சிகளுக்கு நேற்று ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.
வெளிநாட்டு ஊழியர்கள் நிலையம் ஏற்பாடு செய்த கேளிக்கை நிறைந்த அந்த திறனாளர்கள் நிகழ்ச்சி, வெளிநாட்டு ஊழியர்களிடம் காணப்படும் பலதரப்பட்ட ஆற்றல்களை வெளிக்கொணர்வதாக இருந்தது.
சிங்கப்பூரில் வெளிநாட்டு ஊழியர்களுக்காக நடத்தப்பட்ட திறன் போட்டியில் கரகாட்டம் ஆடி வென்ற வேலுச்சாமி முனியப்பராஜ். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்.