புதுடெல்லி: அனைத்துலக பயணிகள் விமானப் போக்குவரத்துக்கு விதிக்கப்பட்டிருந்த தடை ஆகஸ்ட் 31ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டிருப்பதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
எனினும், தேவையின் அடிப்படையில் சில குறிப்பிட்ட வழித்தடங்களில் மட்டும் திட்டமிடப்பட்ட அனைத்துலகப் பயணிகள் விமான சேவை அனுமதிக்கப்பட வாய்ப்புள்ளதாக மத்திய விமானப் போக்குவரத்து பொது இயக்குநரகம் தெரிவித்துள்ளது.
கொரோனா தொற்றுப்பரவல் நெருக்கடி காரணமாக விமானப் போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
எனினும், அனைத்துலக சரக்கு விமானப் போக்குவரத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
மேலும், மத்திய அரசின் ஏற்பாட்டின் கீழ் சில சிறப்பு விமானங்கள் இயக்கப்படுவதற்கும் விமானப் போக்குவரத்து பொது இயக்குநரகம் அனுமதி அளித்துள்ளது.