திருவனந்தபுரம்: கேரளாவில் புதிதாக பாதிக்கப்படும் கொரோனா நோயாளிகளின் அன்றாட எண்ணிக்கை பத்தாயிரத்துக்கும் கீழ் குறைந்துள்ளது. அங்கு நேற்று முன்தினம் 8,850 பேருக்கு கிருமி தொற்றியது.
இந்நிலையில், கர்நாடகாவிலும் தொற்றுப்பரவல் குறைந்து வருகிறது. அங்கு அன்றாட பாதிப்பு எண்ணிக்கை ஐநூறுக்கும் கீழ் பதிவாகி உள்ளது. அங்கு நேற்று முன்தினம் 397 பேருக்கு புதிதாக கிருமி தொற்றி உள்ளது.
மகாராஷ்டிராவிலும் தொற்றுப்பரவல் கட்டுக்குள் வந்து கொண்டிருப்பதாக அம்மாநில அரசு கூறியுள்ளது.
இதற்கிடையே, இந்தியாவில் 18 வயதுக்கு மேற்பட்டவர்களில், இதுவரை 70%க்கு ஒரு தடுப்பூசியாவது போடப்பட்டுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.