ஹாங்காங்: ஹாங்காங்கில் கடைகள், உணவகங்கள் உள்ளிட்ட வர்த்தக நிறுவனங்கள் கூடுதல் நேரம் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் தடுப்பூசி போட்டுக் கொண்ட வாடிக்கையாளர்களை மேலும் அதிகமாகவும் அனுமதிக்க முடியும்.
ஆனால், ஹாங்காங்கின் அனைத்துலக எல்லையைத் திறக்க கோரி அழுத்தம் அதிகரித்தாலும், அதற்குத் தொடர்ந்து மறுத்து வருகிறார் தலைமை நிர்வாகி கேரி லாம். வெவ்வேறு நாடுகளில் இருந்து வந்த ஏழு பேருக்கு நேற்று தொற்று உறுதிசெய்யப்பட்ட நிலையில், தனிமைப்படுத்தல் இல்லாமல் பயணிகளை அனுமதிப்பது என்பது தொற்றுப் பரவல் அதிகரிப்பதற்கான வழி என்று அவர் சொன்னார்.