புதுடெல்லி: சுவாமி விவேகானந்- தரின் பிறந்தநாளையொட்டி நடைபெற்ற ராமாயணக் கண் காட்சி ஒன்றில் காணொளிக் காட்சி மூலம் பிரதமர் மோடி பேசி னார். அப்போது மத அடையாளங் க- ளைத் தேர்தல் பிரசாரத்துக்காக பயன்படுத்தியதாக காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டியுள்ளது. காணொளி ஆதாரத்தை இணைத்து தேர்தல் ஆணையத்- தில் இதுபற்றி காங்கிரஸ் புகார் கூறியுள்ளது. "இந்துக்கள் கடவுளாக வழிபடும் ராமனுடன் தனது தலை- மையிலான அரசின் கொள்கைகளை ஒப்புமைப்படுத்தி பிரதமர் நரேந்திர மோடி பேசியுள்ளார். ராமாயணக் கதாபாத்திரங்களையும் குறிப்பிட்டுத் தேர்தல் பிரசாரத்- துக்குப் பயன்படுத்தியுள்ளார்.
பாஜகவின் தேர்தல் வெற்றிக்- காக மதத்தைத் தவறாக பயன்படுத்தியுள்ளார். மதத்தின் பேரில் வாக்காளர் களின் உணர்வுகளைத் தட்டி- யெழுப்பும் வகையில் பிரதமர் மோடியின் பேச்சு அமைந்துள்ளது. குறிப்பாக சட்டப்பேரவைத் தேர் தல் அறிவிக்கப்பட்டுள்ள உத்- தரப் பிரதேசத்தின் அயோத்தியில் இருந்து இப்பிரச்சினை எழுந்துள்- ள தால் இது முக்கியத்துவம் வாய்ந் ததாகக் கருதப்படுகிறது," என்று அந்தப் புகாரில் கூறப்- பட்டுள்ளது.